search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிமூன் அன்சாரி"

    திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection
    நாகப்பட்டினம்:

    மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து மிகப்பெரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டு காலத்தில் இழந்த பசுமையை மீட்கும் நோக்கத்தோடு கஜா புயல் பாதித்த 4 மாவட்டத்திலும் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் 2019-ம் ஆண்டை பசுமையாண்டு என்று பெயரிட்டு பசுமை திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகளை 4 மாவட்டத்தில் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடியில்நடைபெற்றது.

    திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியையும், எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி தான் இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, 2-வது இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection
    வேதாரண்யம் அருகே தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேட்டை காரனிருப்பு அடுத்த சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சந்தோஷ் (வயது 20). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று சந்தோஷ், வேட்டைக்காரனியிருப்பில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நாகை எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி காரில் வந்தார். காரை டிரைவர் ஓட்டினார். திடீரென மோட்டார் சைக்கிள் மீது எம்.எல்.ஏ. கார் மோதியது.

    இதில் மாணவர் சந்தோஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சந்தோசை மீட்டு எம்.எல்.ஏ. காரிலேயே சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேட்டை காரனிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எம்.எல்.ஏ. கார் மோதி கல்லூரி மாணவர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×